இதாங்க தமிழ்நாடு.. மசூதி, மதர்சாவில் தங்கலாம்! அனைத்து மதத்தினரை அழைக்கும் காயல்பட்டினம் முஸ்லிம்கள்
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையில் மதர்சாவில் தங்கலாம் என முஸ்லிம் ஐக்கிய பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பின் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "கிழக்கே சுலைமான் நகரை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி மண்டபத்தில் தங்கலாம்! இங்கு தங்கியுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: சுலைமான் TNTJ : 9042869396, ஆதம் சுல்தான்: 6383514163
மஜ்லிஸில் புகாரி ஷரீஃப் சபையைச் சுற்றியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சபை மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்பு தொலைபேசி எண்: A.J.சொளுக்கு:9486812440
மேற்குப் பகுதியில் பெரியநெசவு தெருவின் மேற்குப் பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாலாக்ஷி அம்மன் கோவில் தெருவை ஒட்டி உள்ள அனைத்து சமுதாய மக்கள் ஆகியோர்களுக்கு பெரிய நெசவு தெருவில் உள்ள ஹமீதா பெண்கள் மதரசா மண்டபத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்பு தொலைபேசி எண்: ஜாகீர் உசேன்:9994097217
காயல் மத்திய பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜலாலியா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபம் போதவில்லை என்றால் அடுத்துள்ள மெய்தீன் பள்ளி வளாகத்திலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண்: அபு குளவி: 9361020556, மஹ்மூத் சுல்தான்: 9500256645
மொகுதும் ஜும்மா பள்ளியை ஒட்டிய மொகுதும் மக்தப் மண்டபத்தில்,
அதை சுற்றியுள்ள பகுதிகளான பாதிக்கப்பட்ட சிவன் கோவில் தெரு, சாஹித் தம்பி தோட்டம் மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்கள் அனைவரும் இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு தொலைபேசி: கைலாணி:9486655786, அன்சாரி:9043661671
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கண்ட இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
மற்றைய தேவைகளுக்கு பேரவையின் தொடர்பானவர்கள் உங்கள்
தேவைக்கேற்ப தொடர்பு கொள்வார்கள்.
மேலும் அவசர உதவிகளுக்கு: ஜாஹீர் - 9994097217, அப்துர்ரஹ்மான்- 81229 229 91, சம்சுதீன் - 7094161339, நஜீப் - 8608981720, மாஜா - 9677553933, ஹஸன் - 9791294093, சம்சுதீன் - 7397505484" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications