இதாங்க தமிழ்நாடு.. மசூதி, மதர்சாவில் தங்கலாம்! அனைத்து மதத்தினரை அழைக்கும் காயல்பட்டினம் முஸ்லிம்கள்
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையில் மதர்சாவில் தங்கலாம் என முஸ்லிம் ஐக்கிய பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பின் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "கிழக்கே சுலைமான் நகரை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி மண்டபத்தில் தங்கலாம்! இங்கு தங்கியுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: சுலைமான் TNTJ : 9042869396, ஆதம் சுல்தான்: 6383514163
மஜ்லிஸில் புகாரி ஷரீஃப் சபையைச் சுற்றியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சபை மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்பு தொலைபேசி எண்: A.J.சொளுக்கு:9486812440
மேற்குப் பகுதியில் பெரியநெசவு தெருவின் மேற்குப் பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாலாக்ஷி அம்மன் கோவில் தெருவை ஒட்டி உள்ள அனைத்து சமுதாய மக்கள் ஆகியோர்களுக்கு பெரிய நெசவு தெருவில் உள்ள ஹமீதா பெண்கள் மதரசா மண்டபத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்பு தொலைபேசி எண்: ஜாகீர் உசேன்:9994097217
காயல் மத்திய பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜலாலியா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபம் போதவில்லை என்றால் அடுத்துள்ள மெய்தீன் பள்ளி வளாகத்திலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண்: அபு குளவி: 9361020556, மஹ்மூத் சுல்தான்: 9500256645
மொகுதும் ஜும்மா பள்ளியை ஒட்டிய மொகுதும் மக்தப் மண்டபத்தில்,
அதை சுற்றியுள்ள பகுதிகளான பாதிக்கப்பட்ட சிவன் கோவில் தெரு, சாஹித் தம்பி தோட்டம் மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்கள் அனைவரும் இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு தொலைபேசி: கைலாணி:9486655786, அன்சாரி:9043661671
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கண்ட இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
மற்றைய தேவைகளுக்கு பேரவையின் தொடர்பானவர்கள் உங்கள்
தேவைக்கேற்ப தொடர்பு கொள்வார்கள்.
மேலும் அவசர உதவிகளுக்கு: ஜாஹீர் - 9994097217, அப்துர்ரஹ்மான்- 81229 229 91, சம்சுதீன் - 7094161339, நஜீப் - 8608981720, மாஜா - 9677553933, ஹஸன் - 9791294093, சம்சுதீன் - 7397505484" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications