வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும்.. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரம் மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையிலும் நேற்று ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் காலையிலேயே சென்னையில் மழை பெய்தது. சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று மழை தொடரும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், நாளை தமிழகத்தில் சேலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications