Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு மழை கிடையாது.. தமிழகத்தில் இனி வறண்ட வானிலைதான் நிலவுமாம்! இதோ வெதர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் இன்னும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

Meteorological Department has said that dry weather will prevail in Tamil Nadu for the next few days

"கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் நாலுமுக்கு (திருநெல்வேலி) 15 செ.மீ, ஊத்து (திருநெல்வேலி) 13 செ.மீ, காக்காச்சி (திருநெல்வேலி) 12 செ.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி) 9 செ.மீ, ராதாபுரம் (திருநெல்வேலி) 4 செ.மீ, கொட்டாரம் (கன்னியாகுமரி) 3 செ.மீ, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) செ.மீ, புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அடையாமடை (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை, குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14ம் தேதி தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+