Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை காசிமேடு கடலுக்கு கூட்டமாக ஒடிய மக்கள்.. என்னது 'போயா' வந்திடுச்சா.. மிக்ஜம் புயலால் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடல் சீற்றத்தால் சென்னை காசிமேடு பகுதிக்கு அடித்து வரப்பட்ட 'போயா' சாதனத்தை காண பொதுமக்கள் திடீரென அதிக அளவில் குவிந்தனர். அப்படி குவிந்த மக்களை போலீசார் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். இன்று திருவள்ளூர், தொடங்கி கடலூர் வரை பலத்த தரைக்காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் வட தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளில் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. 5-ம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Mick jam cyclone: Buoy device was blown into the Kasimedu area of Chennai due to rough seas

மேலும் தீவிர புயலாகவே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்றும் கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் தான் மழை பொழிவிருக்கும். மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் தரைகாற்று இருக்கும். படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை கடலோர பகுதிக்கு அருகே 100 கி.மீ. தொலைவிற்கு மிக்ஜாம் புயல் நாளை காலை வரும் என்றும் அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரித்தபடியே சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடல் பகுதிகளில் பலத்த சீற்றம் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அந்த சீற்றத்தால் 'போயா' சாதனமே கடலில்இருந்து கடற்கரைக்கு அடித்து வரப்பட்டது. இந்த போயா சாதனம் எதற்கு பயன்படும் விஷயம் என்றால், கடலில் நிலையை அறிவதற்ககாக ஆங்கர்போட்டு நிறுத்தி வைக்கப்படும் ராட்சத சாதனம் ஆகும்.

கடலின் இயல்பு தன்மை, காற்றின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட தட்பவெப்ப நிலைகள் குறித்த தரவுகளை 'போயா' எனப்படும் மிதவை சாதனத்தை கடற்கரைபகுதியில் வைப்பார்கள். அந்த சாதனத்தில் கண்காணிப்பு கேமரா, ரேடார், சூரியசக்தி பேட்டரி, கடற்கரை பகுதியை மீனவர்களை அடையாளம் காண, இரவில் ஒளிரும் மின்விளக்கு உள்ளிட்டவை வைத்திருப்பார்கள். இந்த சாதனத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். இந்த சாதனத்தை வங்க கடல் அடித்து கொண்டு வந்து காசிமேடு கடற்கரையில் வீசியதால் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனிடையே போயா சாதனத்தை காண பொதுமக்கள் திடீரென அதிக அளவில் குவிந்தனர். அப்படி குவிந்த மக்களை போலீசார் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+