மழை விட்டாலும்.. தென் மாவட்டங்களுக்கு காத்திருக்கும் அடுத்த அச்சுறுத்தல்! முன்கூட்டிய அலர்ட்டான அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.

Minister Ma.Subramanian informed that 190 mobile medical vehicles will be sent to the southern districts

இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பின் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

கன­ம­ழை­யில் பாதிக்­கப்­பட்ட திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மற்­றும் தென்­காசி ஆகிய 4 மாவட்­டங்­க­ளுக்கு 190 நட­மா­டும் மருத்­துவ வாக­னங்­கள் அனுப்­­பி வைக்கப்பட்டு உள்­ளது என மருத்­து­வம் மற்றும் மக்­கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்­பிர­ம­ணி­யன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "முத­ல­மைச்­சர் முக ஸ்டாலின் உத்­திரவின் அடிப்படையில் 17/12/2023 மற்­றும் 18/12/2023 ஆகிய இரு­தி­னங்­க­ளில் திருநெல்வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மற்­றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்­க­ளில் பெய்த கன­ம­ழை­யால் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளுக்கு சிகிச்சை வழங்க நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்­பப்­பட்­டு உள்­ளது.

Minister Ma.Subramanian informed that 190 mobile medical vehicles will be sent to the southern districts

ஒரு மருத்­து­வர், ஒரு செவி­லி­யர் அல்­லது மருந்­தா­ளு­நர், ஒரு சுகா­தார ஆய்­வா­ளர் மற்­றும் ஒரு வாகன ஓட்­டு­நர் கொண்ட குழு இந்த நட­மா­டும் மருத்­துவ வாக­னங்­க­ளில் இருக்கும். இக்­கு­ழுக்­கள் வெள்­ளத்­திற்கு பிறகு வரும் தொற்று நோய் தடுப்பு ­ப­ணி­க­ளில் ஈடு­ப­டும். ஒரு நட­மா­டும் மருத்­துவ வாக­னம் நாள் ஒன்­றுக்கு 4 முதல் 5 இடங்­க­ளில் முகாம் அமைத்து வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்ட பொது மக்களுக்கு தேவை­யான சிகிச்சை மற்­றும் தொற்று நோய் தடுப்பு பணி­க­ளில் ஈடு­ப­டும்.

மேலும் வரு­கிற 10 நாட்­க­ளுக்கு நட­மா­டும் மருத்­து­வக்­குழு வாக­னம் பொது மக்­க­ளின் தேவைக்­கேற்ப அந்த மாவட்டங்களில் முகா­மிட்டு செயல்­ப­டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+