Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை வெளுத்து வாங்கியும் சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை - மாநகராட்சி அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் காரண​மாக, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் மழை பெய்து வரு​கிறது. கடந்த டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதி​களில் அதி​க​னமழை பெய்து வருகிறது. இதன் காரண​மாக, மாநகர் மற்​றும் புறநகர் பகு​தி​களில் பல்​வேறு இடங்​களில் குடி​யிருப்​பு​களை மழைநீர் தேங்​கி​யுள்​ளது. இதனால், அப்​பகு​தி​களில் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்​பட்​டது.

chennai rain weather

குறிப்​பாக, மாதவரம் அடுத்த வட பெரும்​பாக்​கம் சாலை, திரு​வொற்​றியூர் ராஜாஜி நகர், வியாசர்​பாடி முல்​லைநகர், திரு.​வி.க.நகர் மண்​டலம், காந்​திநகர், தேனாம்​பேட்டை மண்​டலம், டிரஸ்ட் புரம், அண்​ணாநகர் மண்​டலம் மில்​லர்ஸ் சாலை, சோழிங்​கநல்​லூர் மண்​டலம், கண்​ணகி நகர், அம்​பத்​தூர் தொழிற்​பூங்​கா​, புளியந்​தோப்​பு உள்​ளிட்​ட​ பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

செங்​குன்​றம் பகு​தி​யில் மழைநீர் சூழ்ந்​த​தால், அப்​பகு​தி​யில் வசித்த 30-க்​கும் மேற்​பட்​டோரை ஃபைபர் படகு​கள் மூலம் பேரிடர் மீட்பு படை​யினர் மீட்​டனர். ஓட்​டேரி பகு​தி​யில் கனமழை​யால் வீடு இடிந்​த​தில் 3 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

டிட்வா புயல் வலுவிழந்த சென்னை கடற்கரை அருகே நிலைகொண்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது மழை பெய்து வந்தது. தற்போது சென்னை, புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தது.

chennai rain weather

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+