Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நின்று அடிக்கும் மழை! சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்! அதி கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூரில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இதேபோன்று இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டையில் கனமழைக்கும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவிழந்தது. எனினும் சென்னைக்கு அருகில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், இன்று சென்னையில் மழை தீவிரமடைந்துள்ளது. இன்று காலையில் இருந்தே விடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Weather Cyclone Ditwah Heavy Rain

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

நேற்று ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூரில் பெரிதாக மழை பெய்யவில்லை. இரவில் இருந்து ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நள்ளிரவிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் இன்று சென்னை மற்றும் திருவள்ளூரில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் முதலில் தெரிவித்து இருந்தது.

ஆனால் மழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கு 30 கிமீ தூரத்தில்

நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல். நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.

இன்று மழை பெய்யும் இடங்கள்

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக முதல் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வரும் 7 ஆம் தேதி வரை

நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-12-2025 முதல் 05-12-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் கிளைமேட் எப்படி?

சென்னையில் இன்று (01-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24" செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (02-12-2025}: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சுன் ஒருசி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புளளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை;

வட தமிழகம் புதுவை கடலோரப்பகுதிகள்:

01-12-2025: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள்:

01-12-2025: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+