அடுத்த 2 மணி நேரம் மழை விடாது.. தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இரவு 7 மணி வரைக்கும் மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கான அலர்ட் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மீண்டும் பருவமழை சூடுபிடிக்கும் என வானிலை மையம் கூறி வருகிறது.
நாளை முதல் தமிழகத்தில் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறி வருகிறது. அதன்படி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்பதாலும் தற்போது 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாலும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-'
தமிழகத்தில் இரவு 7 மணி வரை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications