மழை ஓவர்.. ஆனால் அடுத்த சில நாள் காலை வெளியே கால் வைக்கவே முடியாது! வானிலை மையம் மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே லேசான மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் மழை தொடருமா என்பது தொடர்பாக வானிலை மையம் முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் குளிர் அதிகமாக உள்ள நிலையில், அடுத்து சில நாட்களில் குளிர் எப்படி இருக்கும் என்பது குறித்தும் வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை சீசனுக்கு பிறகு பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. ஆனால், பொங்கல் முடிந்த பிறகு கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு மழை பெய்தது.

weather chennai tamil nadu

கடந்த 24 மணி மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 33.9° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாகக் கரூர் பரமத்தியில் 16.0° செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது.

வானிலை மையம்:

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் (ஜனவரி 21), நாளையும் (ஜனவரி 22) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

வரும் ஜனவரி 23ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 24 முதல் 27 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை கிளைமேட்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (ஜனவரி 21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (ஜனவரி 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜனவரி 23ம் முதல் ஜனவரி 25 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகளில் ஜனவரி 21ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜனவரி 22 முதல் 25 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகளில் இன்று எச்சரிக்கை ஏதுமில்லை.

எந்த நாட்களில் கடலுக்குச் செல்லக் கூடாது:

ஜனவரி 22, 23ம் தேதிகளில் மத்திய மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜனவரி 24ம் தேதி தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜனவரி 25ம் தேதி மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+