குடையை ரெடியா வச்சிக்கோங்க.. அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகுது மழை.. சென்னைக்கும் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசி, குமரி, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இன்றும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் தென்காசி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 7 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழையானது பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையானது அதிகபட்சமாக 35- 36 டிகிரி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications