சென்னை வானில் ஒரு அதிசயம்.. ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்.. அடுத்து நடந்த அற்புதம்
சென்னை: சென்னை வானில் ஒரு அதிசயம் இன்று காலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இரட்டை வானவில் தோன்றியது. காலைபொழுது விடிந்ததுமே இந்த காட்சியை கண்ட மக்கள ஆச்சர்யம் அடைந்தனர்.
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் , மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் அடையாறு வேளச்சேரி, மடிப்பாக்கம் , பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோல் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு மாதமாக நீடித்து வந்த வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மழை பெய்தால் ஒரேடியாக பெய்யும். வெயில் அடித்தாலும் ஒரேடியாக அடிக்கும்.. சென்னையில் கன மழை பெய்தால் சாலைகள் தண்ணீரில் மூழ்கி விடும். கடுமையாக வெயில் அடித்தால் வீட்டுக்குள் மின்விசிறி இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலை உள்ளது. இந்த மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு புறமெனில் இன்று காலை விடிந்ததுமே வானில் அரிய நிகழ்வாக இரட்டை வானவில் சென்னையில் தோன்றியது. இந்த இரட்டை வானவில்லை கருமேகங்களுக்கும் நடுவே பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
வானவில் என்பது மழை காலங்களில் தோன்றும் ஒரு சாதாரண நிகழ்வு தான் என்றாலும், சென்னையைப் பொறுத்தவரை மிக அபூர்வமாகவே வானவில் தோன்றும். அதுவும் இரட்டை வானவில் என்பது சென்னையில் மிக அபூர்வமாகவே தோன்றியுள்ளது. அந்த வகையில் இந்த இரட்டை வானவில்லும் குளுகுளு காலநிலையும் சென்னை மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications