மழையெல்லாம் விட்டுருச்சு! கிளம்புங்க.. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை
சென்னை: சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும், கடந்த 14 ம் தேதி மற்றும் நேற்று முன் தினம் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை மையம் எச்சரித்தது போலவே பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்தது. சென்னை கொளத்தூரில் 24 செமீ மழை பதிவானது.
இதைத்தொடர்ந்து தான் நேற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் வானிலை மையம் கூறியது போல பெரிய மழை பெய்யவில்லை. காலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மதிய நேரங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
மதியம் 12 மணியளவில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு வெளியான அறிவிப்பில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ஆனால் அதன்பிறகு மழை பெய்யவில்லை. ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் சென்னை மக்கள் திண்டாடி போயினர். நேற்று மழை பெய்யாமல் வெறிச்சோடியதால், தேங்கியிருந்த மழைவெள்ள நீரும் வடிந்தது. மழையும் பெய்யாததால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் தான் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காற்றழுத்தம் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமோ என மாணவர்கள் எதிர்பார்த்தன நிலையில் இந்த அறிவிப்பானது வெளியானது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications