பிரதமர் மோடியுடன் முதல்வர் முக ஸ்டாலின் சந்திப்பு.. வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
சென்னை: மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்தார்.
மிக்ஜாம் புயலானது சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது. இதனைத் தொடர்ந்து குமரிக்கடல் பரப்பின் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இந்தப் பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காயல்பட்டினத்தில் நூற்றாண்டு காணாத வகையில் ஒரே நாளில் 95 செமீ மழை- அதாவது ஓராண்டு முழுவதும் பெய்யக் கூடிய பெருமழை கொட்டித் தீர்த்தது.

தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. விமானப் படை ஹெலிகாப்டர்கள், கப்பற்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் இந்த பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்த உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன். நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன். இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications