வடதமிழக கடலோரத்தில் ஸ்டே ஆகும் காற்றழுத்தம்! இந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! வெதர்மேன்
சென்னை: வடதமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இந்த வாரம் நல்லதொரு செய்தி காத்திருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது கோவை மற்றும் உள்மாவட்டங்களுக்கு தொலைவில் இருக்கிறது. ஒரு வேளை காற்றழுத்தமானது கடலோர பகுதியை கடந்து தமிழகத்திற்கு வந்தால் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே தற்போது கடலோர மாவட்டங்கள், கடலோரத்திற்கு அருகே இருக்கும் மாவட்டங்களுக்கு மட்டுமே மழை பெய்யும். தென் தமிழகத்தை பொருத்தமட்டில் ராமநாதபுரம் வரை நல்ல மழை பெய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காற்றழுத்தம் எந்த பக்கம் கடக்கிறது என்பதை பார்ப்போம். காற்றழுத்தமானது இலங்கை அருகே கடக்காது. இதற்கு என்ன காரணம் என்றால் இலங்கையில் கரடுமுரடான மலைகள் இருப்பதால் பொதுவாகவே காற்றழுத்தங்களும் புயல்களும் இலங்கையை கடப்பதை தவிர்த்துவிடும்.
எனவே டெல்டா முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடற்கரை பகுதியை நோக்கித்தான் வரும். அந்த வகையில் தற்போது நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்தமும் அப்படித்தான். ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த நேரத்தில் காற்று ஒரு பிரச்சினையாகவே இருக்காது. மழைதான் அச்சுறுத்தலாக இருக்கும். எனவே தென்னை மரங்களின் கிளைகளை வெட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
வடதமிழக கடலோரத்தை நோக்கியே காற்றழுத்தம் நிலை கொள்ளவுள்ளதால் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வடதமிழக கடலோர பகுதிகளில் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
பள்ளி குழந்தைகளுக்கு இந்த வாரத்தில் நற்செய்தி காத்திருக்கிறது. என்றாவது ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொடங்கிவிடும்.
அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகளில், கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தற்போது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தற்போது மெதுவாக நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு, அதாவது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை தொடங்கும். நல்ல மேகக் கூட்டங்கள் அந்த மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யும். நாளை முதல் சென்னையில் மழை வெளுக்கும். டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications