சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. கடுமையான புயல் வீசும்.. முன்பே எச்சரித்த பஞ்சாங்கம்..
சென்னை: கார்த்திகை மாதத்தில் தமிழ்நாட்டில் கடுமையாக புயல் வீசும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மழையோ புயலோ வானிலை ஆய்வு மையம் கணித்து சொல்லும் முன்பாகவே தமிழ் பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டிருக்கும். எந்த நாட்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். எப்போது புயல் வரும்.. எப்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எங்கேங்கு வெள்ளம் வரும் என்றெல்லாம் தமிழ் பஞ்சாங்கத்தில் முன்னோர்கள் கணித்து எழுதி வைத்திருக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்த போதும், கன்னியாகுமரியை புயல் சூறையாடிய போதும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து கூறுவதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் கணித்து கூறியிருந்தனர். இந்த ஆண்டும் சோபகிருது வருட தமிழ் பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதத்தில் கடுமையாக புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை தாக்கும். இந்த ஆண்டு மட்டும் நவம்பர் 28 ஆம் தேதி புயல் சின்னம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 30 தென்கோடு உயரும் மழை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி கடலூருக்கு கிழக்கே புதிய புயல் சின்னம் உருவாகும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை அமாவாசை நாளில் பாண்டிச்சேரிக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றுடன் கனமழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி சென்னையில் பல பகுதிகளில் சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னையின் நகர்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளத்தூர், வேளச்சேரியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications