சிவப்பு நிறத்தில்.. நெல்லை, குமரிக்கு மேலே அது என்ன? வானத்தில் நடக்கும் சம்பவம்.. ஜாக்கிரதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இப்போதைக்கு நிற்காது, கண்டிப்பாக தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தென் தமிழ்நாட்டில் கடந்த 10 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.

 What is the current situation amid heavy rain in southern districts of Tamil Nadu?

தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

மேலடுக்கு சுழற்சி: குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேபோல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

முக்கியமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும்..செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்று வானிலை மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ரெக்கார்ட்: பல இடங்களில் ரெக்கார்ட் படைக்கும் அளவிற்கும் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 மணி முதல் தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் மட்டும் 207 மி.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மைய ரெக்கார்ட் கூறுகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் 67 மிமீ மழை பெய்துள்ளது, தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்தது.

மழை மேக புகைப்படம்: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இப்போதைக்கு நிற்காது, கண்டிப்பாக தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மேலே இருக்கும் மழை மேகங்கள் இதில் பதிவாகி உள்ளன. சிவப்பு நிறத்தில் ரத்தம் போல நீண்டு பரவி இருக்கும் மழை மேகங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த மேகங்கள் தொடர்ந்து அங்கேயே சுழலும். இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+