For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 25ம் தேதி நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி தலைமை வகிக்கிறார். பேரவைத் தலைவர் சுப்பையா வரவேற்கிறார். இந்த விழாவில் பேராசிரியர் மோகன் எழுதிய விருந்தும் மருந்தும் செவ்வியல் இலக்கியச் செழுமை, கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய கவிதை வெளியினிலே..., கவிஞர் நிர்மலா மோகன் எழுதிய தமிழ் சித்தர் இலக்கியம், கவிஞர் ராஜேந்திரபாபு எழுதிய புரளும் மனசு, கவிஞர் ரவி எழுதிய சுட்டும் விழி, கவிஞர் ரவிசங்கர் எழுதிய செம்மொழி தமிழ் இலக்கியத்திறன் ஆகிய தலைப்புகளிலான நூல்கள் வெளியிடப்படுகிறது. இவற்றை எஸ்.பி. முத்துசாமி வெளியிடுகிறார்.

இந்த விழாவில் பேராசிரியர்கள் மோகன், திருமலை, பழனியப்பன், கருப்பையா மற்றும் கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, முத்துநிலவன், ராமனாதன், அய்யாவு, பீர்முகம்மது உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

English summary
Pavendar Bharathidasan literary forum will be releasing new books on September 25 at Pudukottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X