For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ள காதல் ஜோடி குழந்தைகளுடன் தற்கொலை!

By Staff
Google Oneindia Tamil News

ஏற்காடு:

Five committed suicide in Yercaudஏற்காடு மலை விடுதியில் கள்ளக் காதல் ஜோடி தங்களது 3 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.

காங்கேயத்தைச் சேர்ந்தவர் சிவநந்தகுமார் (28). இவருக்குத் திருமணமாகி 8 மாத குழந்தை இருந்தது.

அதே ஊரைச் சேர்ந்தவர் மல்லிகா (38). இவருக்குத் திருமணமாகி மகனும் மகளும் இருந்தனர். இந் நிலையில் இந்த இருவருக்கும் இடையேகள்ளக் காதல் மலர்ந்தது. இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவே, கூட்டாக தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

தங்களது குழந்தைகளுடன் சனிக்கிழமை ஏற்காடுக்கு வந்து விடுதியில் தங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலை அறையை விட்டு வெளியேசென்றனர். இரவில் அறைக்குத் திரும்பினர்.

திங்கள்கிழமை காலையில் அவர்களது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்குத் தகவல்தந்தார்.

போலீஸார் விரைந்து வந்து அறையைத் திறந்து பார்த்தபோது மல்லிகா, சிவ நந்தகுமார் மற்றும் 3 குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மல்லிகாவும், சிவந்தகுமாரும் விஷம் குடித்து இறந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X