For Daily Alerts
Just In
பங்குகள் மூலம் ரூ. 3.5 லட்சம் கோடி நிதி திரட்டிய பிரேசில் எண்ணெய் நிறுவனம்
வெளிநாடுகளில் எண்ணெய் படிமங்கள் உள்ள பகுதிகள், எண்ணெய் கிணறுகளை வாங்க இந்த நிதியை பெட்ரோபிராஸ் பயன்படுத்தவுள்ளது.
வரும் 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுக்குள் தனது பெட்ரோலிய ஏற்றுமதியை பலமடங்கு உயர்த்தி, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க பிரேசில் திட்டமி்ட்டுள்ளது.
இதற்காக ரூ. 10.25 லட்சம் கோடி (224 பில்லியன் டாலர்கள்) செலவிட பிரேசில் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இப்போது ரூ. 3.5 லட்சம் கோடியை பெட்ரோபிராஸ் திரட்டியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை கச்சா எண்ணெய் நிறைந்த வளைகுடாவைச் சேர்ந்த பல முன்னணி நிதி நிறுவனங்களும் அமெரிக்க பரஸ்பர நிதி நிறுவனங்களும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, September 24, 2010, 16:02 [IST]