வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ‛‛வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு தேர்தல் அறிக்கையை புரிய வைக்கிறேன்'' என மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார்.
மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 19ம் தேதி முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

நாளை 2வது கட்டமாக 89 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி அவர் சாடி வருகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‛‛காங்கிரஸ் கட்சியின் நியாய பத்திரம் (தேர்தல் அறிக்கையின் பெயர்) என்பது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கும் பத்திரம். இதில் சில வார்த்தைகளை எடுத்து வைத்து கொண்டு பிரிவினையை ஏற்படுத்துவது உங்களின் வழக்கமாக மாறிவிட்டது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத விஷயங்களை கூட இடம்பெற்றிருப்பதாக ஆலோசகர்கள் கூறும் தகவல் அடிப்படையில் பேசி வருகிறீர்கள். இதனால் உங்களை நேரில் சந்தித்து நியாய பத்திரம் தொடர்பான விளக்கம் அளிக்க தயாராக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications