For Daily Alerts
Just In
புனே: பாஜக முக்கிய பிரமுகரை கொல்ல திட்டம்- ஷோட்டா ஷகீல் கூட்டாளிகள் மூவர் கைது
புனே: புனேயில் பாஜக முக்கிய தலைவரின் உறவினரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மும்பை தாதா ஷோட்டா ஷகீலின் கூட்டாளிகள் மூன்று பேரை மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
கைதான நபர்களின் பெயர் ஹூசைன் ஷாயிக், கணேஷ் பிலாரி, அமின் ஷாயிக் என்பதாகும். இவர்கள் மூவரும் புனேயில் உள்ள தேஹூ ரோடு பகுதியில் மறைந்திருந்த போது போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய அரசியல் படுகொலை நிகழ்த்த திட்டமிட்டது தெரியவந்தது.
பாஜக முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக ஷோட்டா ஷகீல் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary
Mumbai Police Crime Branch on Thursday arrested three people from Chhota Shakeel's gang who had plotted to kill a BJP leader's relative in Pune.
Story first published: Friday, October 24, 2014, 10:26 [IST]