For Daily Alerts
Just In
தாசில்தாரை தாக்கிய வழக்கு…கோர்ட்டுக்கு வராமல் ஆப்சென்ட் ஆன அழகிரி
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக, தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகாததால், விசாரணை ஜுலை மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
2011 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு அழகிரி உள்ளிட்ட 14 பேர் மீது மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி உள்பட யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிபதி மகேந்திரபூபதி ஒத்திவைத்தார்.
English summary
MK.Alagiri and other 14 were not preseneted in Thasilthar assaulted case. The Melur Magistrate Court Adjorned in July.
Story first published: Friday, May 22, 2015, 13:54 [IST]