விவசாயக் கொள்கை உருவாக்க பா.ஜ.க திட்டம்
கோவை:
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி முதல் முறையாக விவசாயக் கொள்கையை உருவாக்கவுள்ளது என கோவையில் பாரதிய ஜனதாக்கட்சியின் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா தெரிவித்தார்.
சுவதேசி பேர் இன்.ஆர்க் என்ற வெப்சைட்டைத் துவக்கி வைக்க கோவை வந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரானகோவிந்தாச்சாரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாவது.
கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன். இந்த ஆய்வின் இறுதிஅறிக்கையை பாரதிய ஜனதாக் கட்சியிடம் சமர்ப்பிக்கவுள்ளேன்.
சென்னை, கல்கத்தா, பிகார், மாகாராஷ்டிரா உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளேன். இந்த ஆய்வுகளினால் பல்வேறு புரியாதவிஷயங்கள், விளங்காத விஷயங்கள் குறித்து ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிய வந்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் தனி மனிதனின் ஆண்டு உணவுஉட்கொள்ளும் அளவு 300 கிலோவிற்கு மேல் இருந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், நமது நாட்டில் இது200 கிலோ விற்கு கீழ் என்ற அளவே பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் விவசாய உற்பத்தி திறன் 280 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்து வருகிறது. ஆனால் நம்மிடம் சேமித்து வைக்கும் திறன் 30 மில்லியன் மெட்ரிக்டன்னாக உள்ளது.
நாடு சுதந்திரமடைந்து இது நாள் வரை இயற்கை வளங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். குறிப்பாக நிலவளம், நீர்வளம், வன வளம்ஆகியவற்றில் நாம் எந்த அக்கறையும் செலுத்த வில்லை.
அதோடு நமது நாட்டில் சமூக ரீதியாக ஊழல், சந்தைப் பொருளாதார வீழ்ச்சி, கிராமப் புற ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை ஆகியவை உட்பட பல்வேறுவிஷயங்கள் அதிகரித்து வந்துள்ளது.
எனவே, தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி முதல் முறையாக விவாவதம் நடத்தி விவசாயக் கொள்கையைஉருவாக்கவுள்ளது. சிறு தொழில் வளர்ச்சிக்காக தனியாக ஒரு வாரியத்தை துவக்கி அதனால் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதோடு சர்வதேச அளவில் நமது வலிமையை பொக்ரான் குண்டு வெடிப்பினால் வெளிப்படுத்தியுள்ளோம். தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலக நாடுகளில்முன்னணியில் உள்ளோம்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் தான் வழி வகுத்தது. இதனால் நமது பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.இது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையைத்தான் அரசு நடத்த முடியுமே ஒழிய வேறு வழியில்லை. வேண்டுமானால் மீண்டும் ஒரு வருடத்திற்கு ஒத்திப் போடமுடியும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக் காரணமாக இருந்து விட்ட காங்கிரஸ் கட்சி, எந்த விஷயம் கிடைக்கவில்லை என்றால், அந்தப் பிரச்னையை கையில்எடுத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் தெளிவாகத் தெரிவித்துள்ளபடி அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குட்பட்டு தான் அங்கு கோயில் கட்டுவதுகுறித்து முடிவு எடுக்க முடியும். அங்கு ராமர் பிறந்தாரா இல்லையா என்பது பற்றி நீதிமன்றத்தால் கூட கூற இயலாது. ஆனால், ராமர் பிறந்தஇடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதில் மக்கள் உணர்வுப் பூர்வமாக இருந்தால் அதை நீதிமன்றத் தீர்ப்பால் கூட கட்டுப்படுத்த முடியாது என்றார்கோவிந்தாச்சாரியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications