Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்க முடியாது.. பொன்முடி கேள்விக்கு அமைச்சர் சம்பத் திட்டவட்ட பதில்

ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க முடியாது என்று அமைச்சர் சம்பத் சட்டசபையில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க முடியாது என்று தொழிற்துறை அமைச்சர் சம்பத் திட்டவட்டமாக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ பொன்முடி ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

Cannot fix Sugarcane price Rs.3500 per ton, Minister Sampath says

இதற்கு பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் சம்பத், ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத் தொகை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சம்பத் கூறினார்.

இதுகுறித்து அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு டன் கரும்புக்கு 3500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+