ஜூலை 7 ல் பி.ஈ. கவுன்சலிங் ஆரம்பம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கவுன்சலிங் வரும் ஜூலை மாதம்7ஆம் தேதி முதல் நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்சேர்க்கையை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடித்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியிலும் கவுன்சிலிங்நடத்தப்படவுள்ளது. மாநிலத்தில் தென் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு திருச்சியிலும் வட பகுதிகளில் உள்ளமாணவர்களுக்கு சென்னையிலும் கவுன்சிலிங் நடைபெறும்.
மாணவர் சேர்க்கையை விரைந்து முடிப்பதற்காக இந்த 2 நகரங்களிலும் ஒரே நேரத்தில் நவீனத் தொழில்நுட்பஇணைப்பின் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஜூலை 5 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ரேங்க் பட்டியல்: மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்களின் ரேங்க் பட்டியல் ஜூன்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications