மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
திருச்சி: மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.
Recommended Video
இது தொடா்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு 9 ஆண்டுகள் கடந்து தற்போது, தான் சரியாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீா் திறப்பால் காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குறுவை சாகுபடிக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்தில் கேட்டுப் பெற வேண்டியது அவசியமானது. மேலும், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடைமடை வரை சென்று சேர பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.
மேலும் மேட்டூர் அணையில் தற்போது உள்ள 63 டிஎம்சி தண்ணீர் போதுமானது அல்ல. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய குறைந்தது 125 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டும். கடைமடை வரை டெல்டா மாவட்டங்களின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவேண்டும்' இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவா் புலியூா் நாகராஜன் கூறியது:
மேட்டூா் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 20 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடையும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். சாகுபடி பணிகளுக்கு கூலி ஆள்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களை வேளாண் பணிக்கு திருப்பிவிட வேண்டும்.
காவிரிப் பாசனத்தில் திருச்சி, கரூா் மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கொண்டு சோ்க்க வேண்டும் என தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications