நவீன இந்தியாவை உருவாக்கிய 3 மேதைகள்
டெல்லி:
இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றிய மேதைகள் கவிஞர் கபிர், மகாத்மாக காந்தி மற்றும் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியேர் தான் எனபிரான்ஸ் நாட்டு தத்துவத்துறை பேராசிரியர் கை ஸோர்மென் தெரிவித்துள்ளார்.
ஜீனியஸ் ஆப் இந்தியா என்ற தனது புத்தகத்தை வெளியிட்டு விட்டு பேராசிரியர் ஸோர்மென் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவை நவீன இந்தியாவாக உருவாக்கிய பெருமை மகாத்மாக காந்தி, சுவாமிநாதன் மற்றும் கபிர் ஆகியோரைச் சேரும். அவர்களது சிந்தனை,செயல்பாடுகள் எல்லாம் காலம்கடந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியா வந்திருந்தேன். அப்போது இந்தியாவைக் குறித்து எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்போதுகாந்தியைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தும் நான் அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை.
கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பத் துறையைமேம்படுத்துவதற்கும் காந்தி ஒருபோதும் எதிர்ப்புக் கூறியதில்லை.
இப்போதுதான் விஞ்ஞானிகள், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பததுடன் கூடிய மனிதாபிமாமும் தேவை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
பேராசிரியர் சுக்தேவ் சிங்கின் ஆங்கிலக் கவிதையை மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் கபிர். அதாவது தனது தமிழ் மொழி பெயர்ப்பில், அரசியலில்மதங்கள் ஏற்படுத்தும் பிரச்சனை குறித்து மிக அழகாக எழுதியுள்ளார்.
இவர் கூறியது போல் இந்தியாவும், ஐரோப்பிய நாடுகளும் மிக அதிக அளவு மத ரீதியான அரசியலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுநிஜம்.
அடுத்ததாக, வேளாண் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர் டாக்டர்.சுவாமிநாதன்.
குறிப்பாக இந்தியாவில் தமிழக கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண்மைத் தொழிலில் எப்படி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுஎன்பதை புரிய வைத்தவர் சுவாமிநாதன். இதனால் இந்த மூன்று பேரும் இந்தியா நவீன இந்தியாவாக உருமாற வழிவகுத்த மேதைகள் என்றேகூறலாம்.
மேலும் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையும் என்னை மிகவும் கவர்ந்தவை.
முதலில் எனக்கு இந்தியாவைக் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் மலையாள எழுத்தாளர் முகுந்தன் மற்றும் வங்காளகவிஞர் சின்மோயா குஹா என்பவர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டேன்.
நான் எழுதியுள்ள இந்த புத்தகம் ஸ்பெயின் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றார் ஸோர்மென்.
யு.என்.ஐ.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications