நவீன இந்தியாவை உருவாக்கிய 3 மேதைகள்
டெல்லி:
இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றிய மேதைகள் கவிஞர் கபிர், மகாத்மாக காந்தி மற்றும் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியேர் தான் எனபிரான்ஸ் நாட்டு தத்துவத்துறை பேராசிரியர் கை ஸோர்மென் தெரிவித்துள்ளார்.
ஜீனியஸ் ஆப் இந்தியா என்ற தனது புத்தகத்தை வெளியிட்டு விட்டு பேராசிரியர் ஸோர்மென் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவை நவீன இந்தியாவாக உருவாக்கிய பெருமை மகாத்மாக காந்தி, சுவாமிநாதன் மற்றும் கபிர் ஆகியோரைச் சேரும். அவர்களது சிந்தனை,செயல்பாடுகள் எல்லாம் காலம்கடந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியா வந்திருந்தேன். அப்போது இந்தியாவைக் குறித்து எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்போதுகாந்தியைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தும் நான் அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை.
கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பத் துறையைமேம்படுத்துவதற்கும் காந்தி ஒருபோதும் எதிர்ப்புக் கூறியதில்லை.
இப்போதுதான் விஞ்ஞானிகள், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பததுடன் கூடிய மனிதாபிமாமும் தேவை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
பேராசிரியர் சுக்தேவ் சிங்கின் ஆங்கிலக் கவிதையை மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் கபிர். அதாவது தனது தமிழ் மொழி பெயர்ப்பில், அரசியலில்மதங்கள் ஏற்படுத்தும் பிரச்சனை குறித்து மிக அழகாக எழுதியுள்ளார்.
இவர் கூறியது போல் இந்தியாவும், ஐரோப்பிய நாடுகளும் மிக அதிக அளவு மத ரீதியான அரசியலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுநிஜம்.
அடுத்ததாக, வேளாண் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர் டாக்டர்.சுவாமிநாதன்.
குறிப்பாக இந்தியாவில் தமிழக கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண்மைத் தொழிலில் எப்படி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுஎன்பதை புரிய வைத்தவர் சுவாமிநாதன். இதனால் இந்த மூன்று பேரும் இந்தியா நவீன இந்தியாவாக உருமாற வழிவகுத்த மேதைகள் என்றேகூறலாம்.
மேலும் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையும் என்னை மிகவும் கவர்ந்தவை.
முதலில் எனக்கு இந்தியாவைக் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் மலையாள எழுத்தாளர் முகுந்தன் மற்றும் வங்காளகவிஞர் சின்மோயா குஹா என்பவர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டேன்.
நான் எழுதியுள்ள இந்த புத்தகம் ஸ்பெயின் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றார் ஸோர்மென்.
யு.என்.ஐ.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications