விவசாயத்துக்கு பாதிப்பில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தலாம்.. இல.கணேசன்
விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாமல் ஹைட்ரோ கார்பன் செயல்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எம்.பி இல. கணேசன், ''நம் நாட்டில் பல வளங்கள் இருக்கும்போது, வெளிநாட்டில் நாம் ஏன் கையேந்த வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோ புரியவைத்து பிறகு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல'' என அவர் கூறினார்.

நெடுவாசலில் மக்கள் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து வருவதால், பாஜகவினர் தங்களுடைய கருத்துக்களிலிருந்து இறங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு விருப்பமில்லாவிட்டால் திட்டம் செயல்படுத்தப்படாது என எச்.ராஜா, தமிழிசை பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தீங்கானது என்று சொல்பவர்கள் விஞ்ஞானிகளா என கேட்டது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications