நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை:
மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமைவெளியிடப்பட்டன.
தமிழகத்திலுள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 21 மற்றும்22 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிலும் நடந்தது. 1 லட்சத்து 38,333 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வைஎழுதினர்.
மொத்தம் 245 மையங்களில் நடந்த இந்தத் தேர்வின் முடிவுகள் புதன்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்தத் தேர்வில்,மருத்துவப் பிரிவில் 8 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்களை பெற்றனர். பொறியியல் பிரிவில் 3 மாணவர்கள்99.58 சதவீத மதிப்பெண்களைப் பெற்றனர்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களின் விற்பனை மே 21ம் தேதிதுவங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 20-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குஅனுப்ப வேண்டும்.
நுழைவுத் தேர்வு முடிவுகளை இன்டர்நெட்டிலும் காணலாம். அதற்கான முகவரி:












Click it and Unblock the Notifications