சிறுதொழிலை காப்பாற்ற கோருகிறார் நாயனார்
திருவனந்தபுரம்:
மத்திய பட்ஜெட்டில் சிறு தொழில்களை காப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் கூறினார்.
தாராள இறக்குமதி கொள்கையால் கேரளாவின் தேங்காய் மற்றும் ரப்பர் தொழில் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியவிவசாயத்துறை, தொழிற்துறை குறிப்பாக சிறு தொழில்துறைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் வீட்டுவசதி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து கடந்த மூன்றாண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட மாநில அரசு மற்றும் கேரள உள்ளாட்சிஅமைப்புகள் கடனுதவி அளித்துள்ளன.
மேலும், இத்திட்டத்தினால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி மனித நேர உழைப்பிற்கும் வழி காணப்பட்டது. இது விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குமத்திய உதவி அதிகரிக்கப்பட்டால் வரவேற்கப்படும்.
நாட்டின் மொத்த உற்பத்தியின் சதவீத அதிகரிப்பிற்கு முன்னோடியாக நாட்டின் உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க வழி காண வேண்டும் எனக் கூறியுள்ளார்நாயனார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications