மும்பையில் விவசாயிகள் போராட்டம்
கோவை:
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் விவசாய விளைபொருட்களை எதிர்த்து மும்பை துறைமுகத்தில் கப்பல் முற்றுகைப் போராட்டம் நடத்தவிவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி கூறியதாவது:
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் இந்தியாவில் விவசாயிகள் பயிரிடும் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இந்தவிளைபொருட்களால் விவசாயம் பாழ்பட்டு வருகிறது. விவசாயிகள் பலத்த நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக கன்னியாகுமரியில், வண்டி யாத்திரையைத் தொடங்கப்பட்டது.இந்த வண்டி யாத்திரை கேரள மாநிலத்திற்குச் சென்று பாலக்காடு வழியாக கோவை வந்தது.
இது தர்மபுரி, சேலம் வழியாக மைசூரை அடைந்து கர்நாடக மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணம் பிப்ரவரி 19ம் தேதி மும்பைத்துறைமுகத்தை அடைகிறது. அங்கு வெளிநாட்டு உணவுப் பொருள் ஏற்றி வரும் கப்பலை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications