நீங்க விவசாயத்தை நேசிக்கிறீங்களா? அப்போ துணை வேளாண் அலுவலர் பணி உங்களுக்குத்தான்!
சென்னை: தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 417 துணை வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417
பணியின் பெயர்: துணை வேளாண் அலுவலர்
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் வேளாண் துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 5200 - 20,200 + தர ஊதியம் ரூபாய் 2800.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications