தஞ்சையில் முழுவீச்சில் நெல் அறுவடை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் சம்பா நெல் அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா அறுவடை முழு வீச்சில்நடைபெறுகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த வருடம் 1 ஹெக்டேருக்கு 5.5 டன் அளவுக்குசம்பா நெல் அறுவடை இருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதலுக்காகதமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகம் 270 மாவட்ட கொள்முதல் மையங்களைஅமைத்துள்ளது.
இந்த மையங்களுக்கு தினசரி 4000 டன் நெல் வந்து கொண்டுள்ளது. இதுவரை 40,000டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும் 25 கொள்முதல்மையங்கள் அமைக்கப்படும்.
மூன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிரிடுதல் 10லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது என்றார் ராஜாராம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications