சட்டசபை கட்டுமான பணி-முதல்வர் நேரில் ஆய்வு
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேவை, தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.
அவருடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.
கட்டுமானப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர்.
சந்திரசேகர், ராதாரவி சந்திப்பு:
முன்னதாக தமிழ்நாடு திரைப்படத்துறை சீரமைப்புக் குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர்கள் சந்திரசேகர் மற்றும் ராதாரவி ஆகியோர் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
தங்களுக்கு தரப்பட்ட பொறுப்புக்கா நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோவை விவசாய மாநாடு: கருணாநிதி பங்கேற்பு:
இந் நிலையில் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அகில இந்திய வேளாண் அறிவியல் மாநாடு நவம்பர் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதன் துவக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள விவசாய அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் வேளாண் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இம் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானிகள் 1,000 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications