அதிக மின்சாரம்; கூடுதல் கட்டணம் முறை ரத்து
சென்னை: வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்,
இரண்டு மாதங்களுக்கு 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் மின் தேவையில் 20 சதவீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என நேற்று முன் தினம் மின்வாரியம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தி்ல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக மின் நிலைமை குறித்து உயர் மட்டக் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், எரிசக்தித் துறை செயலாளர் ஸ்மிதா நாகராஜ், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
கடந்த காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தித் திட்டங்கள் போதுமான அளவிற்கு நிறுவப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
விவசாயிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் பாதிக்காத வகையில் கிடைக்கும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் கடந்த 20ம் தேதி மின் வினியோகக் கட்டுப்பாட்டு முறை அறிவிக்கப்பட்டது.
சீராகவும், சிக்கனமாகவும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு அத்தியாவசியமான நிலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனாலும் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்துவோர் 1.3 கோடி லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில், அரசு வெளியிட்ட அறிவிப்பால் பாதிக்கப்படுவோர் எனப்படும் எண்ணிக்கை வெறும் 5 லட்சம் பேர்தான்.
எனினும் எதிர்க் கட்சிகளைச் சார்ந்தோர் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எந்த வீடுகளுக்கும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு அறிவிக்கப்பட்ட மின் கட்டுப்பாடு தொடர்கிறது.
-
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications