அதிக மின்சாரம்; கூடுதல் கட்டணம் முறை ரத்து
சென்னை: வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்,
இரண்டு மாதங்களுக்கு 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் மின் தேவையில் 20 சதவீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என நேற்று முன் தினம் மின்வாரியம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தி்ல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக மின் நிலைமை குறித்து உயர் மட்டக் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், எரிசக்தித் துறை செயலாளர் ஸ்மிதா நாகராஜ், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
கடந்த காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தித் திட்டங்கள் போதுமான அளவிற்கு நிறுவப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
விவசாயிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் பாதிக்காத வகையில் கிடைக்கும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் கடந்த 20ம் தேதி மின் வினியோகக் கட்டுப்பாட்டு முறை அறிவிக்கப்பட்டது.
சீராகவும், சிக்கனமாகவும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு அத்தியாவசியமான நிலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனாலும் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்துவோர் 1.3 கோடி லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில், அரசு வெளியிட்ட அறிவிப்பால் பாதிக்கப்படுவோர் எனப்படும் எண்ணிக்கை வெறும் 5 லட்சம் பேர்தான்.
எனினும் எதிர்க் கட்சிகளைச் சார்ந்தோர் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எந்த வீடுகளுக்கும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு அறிவிக்கப்பட்ட மின் கட்டுப்பாடு தொடர்கிறது.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications