ஓ.பி.எஸ் அமைத்துள்ள போர்வெல் கிணறுகளால் குடிநீர் பஞ்சம்... பொதுமக்கள் புகார்
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் கிணறுகளால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெரியகுளம் பகுதியில் மிகவும் ஆழமாக போர்வெல் அமைத்துள்ளார் என்றும் அதனால் அந்தப் பகுதியில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் விவசாய நிலங்களை வாங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிவேக மின்மோட்டார்கள் பொறுத்தியுள்ளதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், 100 அடி ஆழம் மட்டுமே உள்ள கிராம சமுதாய கிணறுகளில் தண்ணீர் வற்றி, குடிநீருக்கே அலைய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல கிலோ மீட்டர் சுற்றி அலைந்தால்தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
இந்நிலையில், மேலும் ஒரு கிணறு தோண்டி பம்ப்செட் அமைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், தேனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போர்வெல் கிணறால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அரசு சரிசெய்யவில்லை என்றால் பெரிய அளவுக்குப் போராட்டங்கள் நடத்தவும் ஊர் மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஊர்கூட்டம் போட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் லட்சுமிபுரம் மக்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications