பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
வேறு
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான்இதைக் கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்
மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்
சினமென தீ அறிவைப் புகைத்த லாலே
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். (78)
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர் என்றான். (79)
(தொடரும்)












Click it and Unblock the Notifications