For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஆதியி லாதி யப்பா! - கண்ணா !
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொ ருளே!
சோதிக்குச் சோதி யப்பா! - என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடு வாய்!
மாதிக்கு வெளியினி லே - நடு
வானத்திற் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடு வாய், கண்ணா!
சுடர்ப் பொருளே, பே ரடற்பொரு ளே! (92)
கம்பத்தி லுள்ளா னோ? - அடா!
காட்டுன் றன் கடவுளைத் தூணிடத் தே!
வம்புரை செய்யுமூடா - என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத் தான்.
செம்பவிர் குழலுடை யான்; - அந்தத்
தீயவல் விரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழு தேன்; என்னை
நாணழி யாதிங்குக் காத்தருள் வாய். (93)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]