For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
22. மணப்பெண்
தன்னை யறியாய், சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய்,காணெணிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் (30)
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய்,காணெணிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் (30)
மண்மென்னும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன் ;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன் ; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியந் தேடுவேன் ; (35)
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]