பாரதி பக்கம்
பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே - செழுநீர், மடுக் கரையினிலே,
அய லெவருமில்லை -தனியே ஆறுதல் கொள்ள வைத்தேன், (1)
காற்றடித் ததிலே - மரங்கள், கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே - சிதறி, நாடெங்கும் வீழ்ந்தனவே. (2)
சிறிய திட்டையிலே - உளதோர், தென்னஞ் சிறுதோப்பு
வறிய வனுடைமை - அதனை வாயு பொடிக்க வில்லை. (3)
வீழ்ந்தன சிலவாம் - மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே அதனைவாயு பொறுத்து விட்டான். (4)
தனிமை கண்டதுண்டு - அதிலே சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம். பாகுமதுர மன்றோ. (5)
இரவி நின்றதுகாண் - விண்ணிலே, இன்ப வொளித்திரளாய்
பரவி யெங்கணுமே -கதிர்கள் பாடிக் களித்தனவே. (6)
நின்ற மரத்திடையே - சிறிதோர் நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே - நிலையாம், இன்பம் அறிந்து கொண்டேன். (7)
வாழக் பராசக்தி! - நினையே வாழ்த்திடுவார் வாழ்வார் ;
வாழ்க பராசக்தி -இதையென், வாக்கு மறவாதே! (8)












Click it and Unblock the Notifications