பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கவிதைக் காதலி
(தொடர்ச்சி)
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன்றியா முடிந்தபின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைத்தும்
இரும்புகழ் முனிவனுக்கு இழியதா மில்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும், (45)
முனிவனும் பன்றியா முடிந்தபின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைத்தும்
இரும்புகழ் முனிவனுக்கு இழியதா மில்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும், (45)
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்.
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும் ஏடா! நிற்க!
நிற்க! நிற்க! முன்னர்யா நினைந்தவாறு
அத்துணை துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை. (50)
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன்கணே யுளவாம்:
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம் பீழையோ டிவ்வுரை
செவியறீஇ முடிசாய்த் தினையவன் சென்றனன். (55)
(தொடரும்)












Click it and Unblock the Notifications