For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
ஆதிப் பரம்பொருள் நாரணன் - தெளி
வாகிய பொற்கடல் மீதிலே - நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம் கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் - ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான் - இந்தச்
சீதக் குவளை விழியினான் - என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர். (81)
நானெனும் ஆணவத் துள்ளலும் - இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் - பர
மோன நிலையின் நடத்தலும் - ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் - நடு
வான சருமங்கள் செய்தலும் - உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் -பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் - தனது
உள்ளம் அருளின் நெருடலும், (82)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]