பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 01, 2001
( தொடர்ச்சி)
கேட்டாய்! அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா?
இல்லை. அது செத்துப் போய்விட்டது.
நான் ப்ராணசுத்தி.என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாததுசவம்.
நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்தது.
சுகம் பெற்றது. அதை உறங்க -இறக்க - விட்டுவிட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே
அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி
பிழைத்துவிடும்.
நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான்
சக்திகுமாரன், என்னை வணங்கி வாழ்க என்றான்.
நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யஷம், ஹ்மாசி
த்வாமேவ ப்ரத்யஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.












Click it and Unblock the Notifications