பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்டு 03, 2001

Subramaniya Bharathi

கண்ணன் - என் காந்தன்

ராகம் -வராளி
தாளம் - ஏக தாளம்

சிருங்கார ரசம்
கனிகள் கொண்டு தரும் - கண்ணன்
கற்கண்டு போலினிதாய்,
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய. பொட்டிடவே- வண்ணம்
இயன்ற சவ்வாதும், (1)

கொண்டை முடிப்பதற்கே: - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும் :
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த் துசெம் பஞ்சுதரும்:
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ! (2)

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைந்து மார்பெழுத:
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்:
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்:
மங்களமாகுமடீ! - பின்னோர்
வருத்த மில்லையடீ! (3)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+