For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஆகஸ்டு 03, 2001
கண்ணன் - என் காந்தன்
ராகம் -வராளி
தாளம் - ஏக தாளம்
தாளம் - ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டு தரும் - கண்ணன்
கற்கண்டு போலினிதாய்,
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய. பொட்டிடவே- வண்ணம்
இயன்ற சவ்வாதும், (1)
கொண்டை முடிப்பதற்கே: - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும் :
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த் துசெம் பஞ்சுதரும்:
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ! (2)
குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைந்து மார்பெழுத:
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்:
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்:
மங்களமாகுமடீ! - பின்னோர்
வருத்த மில்லையடீ! (3)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]