பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஹே காளீ!
எண்ணில்லாத பொருச்குவை நானும்,
ஏற்றமும், புலி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணிலாவின் அமைதியும் அருளும்,
தருவள் இன்றென தன்னை யென்காளீ:
மண்ணிலார்க்குத் துயரின்றிசத் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். (1)
ஏற்றமும், புலி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணிலாவின் அமைதியும் அருளும்,
தருவள் இன்றென தன்னை யென்காளீ:
மண்ணிலார்க்குத் துயரின்றிசத் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். (1)
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்:
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாதவளங்கள் கொடுப்பேன்:
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்:
நான்வி ரும்பிய காளி தருவாள். (2)
(தொடரும்)












Click it and Unblock the Notifications