For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்ச் 08, 2001
தேசிய கீதங்கள்
லாஜபதிராய் துதி
அதன் கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெல்லாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே லாஜபதி, இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரோ? (1)
ஒரு மனிதன் தனைப்பற்றி பலநாடு
கடத்தியவற்கு ஊறு செய்தல்
அருமையிலை, எளிதினவர், புரிந்திட்டார்
ரென்றிடினும், அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெல்லாம்
ஓட்டியெவர் வாழ்வதிங்கே? (2)
பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
செய்ததனால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
டிற்பத்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதஸ் வியத்தற் கொன்றோ? (3)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]