பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் 08, 2001

Subramaniya Bharathi

உபதேசம்

பக்கத்து வீடிடிடந்து சுவர்கள் வீழ்ந்த

பாழ்மனையொன் றிருந்ததங்கே: பரம யோகி

ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி

ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி

அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,

அறிதிகொலோ! எனக்கேட்டான் அறிந்தேன் என்றேன்

மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்: யானும்

வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். (27)


தேசிகன் காட்டியெனக் குரைத்த செய்தி

செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்:

வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,

மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்:

தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே

தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்:

பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்

பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான். (28)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+