For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 08, 2001
உபதேசம்
பாழ்மனையொன் றிருந்ததங்கே: பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
அறிதிகொலோ! எனக்கேட்டான் அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்: யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். (27)
தேசிகன் காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்:
வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்:
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்:
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான். (28)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]