பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 08, 2001
8.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை மூடிக் கொள்கிறான்.
பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ
முடியாது.
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ?
காற்று நம்மீது வீசுக.
அது நம்மை நோயின்றி காத்திடுக.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர்.
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்.
காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது.
அழுகின பண்டங்கள் போடலாகாது.
புழுதி படிந்திருக்கலாகாது.
எந்த விதமான அசுத்தமும் கூடாது.
காற்று வருகின்றான்.
அவன் வரும் வழியை நன்கு துடைத்து நல்ல நீர்
தெளித்து வைத்திடுவோம்.
அவன் வரும் வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும்
செய்து வைப்போம்.
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்திவைப்போம்.
அவன் நல்ல மருந்தாக வருக;
அவன் நமக்கு உயிராகி வருக;
அமுதமாகி வருக.
காற்றை வழிபடுகின்றோம்.
அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன்.
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்.
அவன் வாழ்க.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications