For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
செப்டம்பர் 08, 2001
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
(நொண்டி சிந்து)
1. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே,
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்:
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு)
2. மந்திர வாதி யன்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்:
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்:
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார் (நெஞ்சு)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]