For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

செப்டம்பர் 18, 2001

Subramaniya Bharathi

தேச முத்துமாரி -2

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். (1)

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்:
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீர்ப்பாய். (2)

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி:
ஒப்பி.யுன தேவல்செய்வேன் உனதருளில் வாழ்வேன். (3)

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும். (4)

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்:
யாதானுந் தொழில் புரிவோம்: யாதுமவள் தொழிலாம். (5)

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்:
இன்பமே வேண்டி நிற்போம்: யாவுமவள் தருவாள். (6)

நம்பினார் கெடு வதில்லை: நான்கு மறைத் தீர்ப்பு!
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். (7)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X